இயற்கையோடு இயைந்த வாழ்வு!

Wednesday, August 13, 2008

0 comments  

கண்டு நெகிழ்ந்து போனேன்!

உலகினை தூர் வாரவேண்டுமே!!

Wednesday, July 16, 2008

0 comments  


கற்றது தமிழ் திரைப்படத்தில் உள்ள இந்த பாடல் எவ்வளவு பிரபலமென்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறி! மெட்டுக்கு ஏற்றாற்போல் வார்த்தைகளை திணிக்காமல் சொல்லவந்ததை அழகாகவும் ஆழமாகவும் சொல்லும் வரிகள். நா.முத்துகுமாரின் படைப்பு இது. சுரணை உள்ள தமிழனுக்கு நரம்பு புடைக்கும்!!!!











வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி
வலிக்க வலிக்க தொட்டுப்பார்த்தேன்
குறுக்கு வெட்டு தோற்றத்தில்
வலியை கொஞ்சம் வெட்டிப்பார்த்தேன் (2)

இது வேறு உலகம் ஓஹோ!
இது பத்தாம் கிரகம் ஓஹோ!
இறைவா இங்கே
நீயும் வந்தால் மிருகம்!

இது வேறு உலகம் ஓஹோ!
இது பத்தாம் கிரகம் ஓஹோ!
இறைவா இங்கே
வந்தால் நீயும் மிருகம்!

கற்றதால் பெற்றதோ பெரும் வாழல்லவா?
குத்துதே கொத்துதே பல பாம்பல்லவா?
எங்கு போயினும் பேய்களே!
எலும்பு தின்றிடும் நாய்களே!
எட்டு திக்கிலும் பொய்களே
இங்கு அலைகின்றதே

கேட்டதால் பெற்றதோ பெரும் வலியல்லவா?
கொன்றதால் கண்டதோ புது வழியல்லவா?
எங்கு நோக்கிலும் அம்மணம்
ஏற்று கொள்ளுமா என்மனம்
ஆடி தீர்குதே சன்னதம்
ரத்தம் கொதிக்கின்றதே!

உலகினை தூர் வாரவேண்டுமே!
உண்மை மட்டும் வாழவேண்டுமே!
கனவுகள் கை கூட வேண்டுமே!
கொள்ளும் கோபம் கூட வேண்டுமே!
எனக்கென புது பூமி வேண்டுமே!
தமிழ் தான் அங்கே வேண்டுமே!
தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே!
எச்சில் இதயம் மாரவேண்டுமே!

அடடா இது நடக்குமா?
என் பூமி எனக்கு கிடைக்குமா? ஓ!
அது வரை நெஞ்சம் பொறுக்குமா?
என் தொன்மத்தமிழினம் பிழைக்குமா? ஓ?

அகம் புறம் என இரண்டு பிரிவிலே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்
அடுத்தவர் தமை சீண்டி பார்க்கையில்
எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குணம்!

மழை - சிறுகதை

Wednesday, July 2, 2008

2 comments  


அவதி அவதியாக வாடிக்கை எல்லாம் முடித்து நேரத்தை பார்த்தான் சடையன். சிறிய முள் மூன்றையும் பெரிய முள் பனிரெண்டையும் நெருங்கி கொண்டிருந்தன. வாரமெல்லாம் இயந்திரமாக சுழன்றவனுக்கு இன்னும் சற்று மணிகளில் ஞாயிற்றுகிழமையும் முடிய போவதென்று நினைத்தாலே கவலையாக இருந்தது. இப்போது கிளம்பினால் எப்படியும் சூரியன் மறையும் முன் அந்த இடத்தை போய் சேர்ந்திடலாம என்று பையில் புகைப்பட பெட்டியை போட்டு தோளில் மாட்டினான். செருப்பு காலோடு அவசவசரமாக சட்டியில் இருந்த உணவை நாக்குக்கு சுவை தெரிய கூட நேரம் கொடுக்காமல் தொண்டைக்குள் அனுப்பினான்.

சன்னல் திரையை நீக்கி பார்த்தவன் முகத்தில் ஏமாற்றம். எங்கிருந்து வந்தன இந்த முனகும் மேகங்கள்? "மழையா?" என்று வாய் விட்டு கேட்டான்! உதடுகளை பிதுக்கி ஏமாற்றத்தில் தலையை இருபுறமும் வேகமாக ஆட்டினான். ஆத்திரம் பெருக்கெடுக்க அசிங்கமான வார்த்தையில் திட்டினான். வேறு யாரை? ஆண்டவனை!

கோபமாக நாற்காலியில் அமர்ந்து மௌனமானான். வெறிச்சோடிய அந்த வீட்டை அங்கும் இங்கும் பார்த்து ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்து போனான். சுள்ளென்று வெயில் மீண்டும் வீட்டுக்குள் வர, சன்னலை போய் எட்டி பார்த்தவனுக்கு காதலியை கண்டது போல இன்பம். எங்கே போயின அந்த மேகங்கள்? துள்ளி குதித்து பையில் கொஞ்சம் சில்லறையை அள்ளிப்போட்டு வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினான். போய் நின்றதும் ரயில் வண்டி வர, சன்னலோர இருக்கை ஒன்று தேடி ஓரமாய் அமர்ந்தான்.

ஊருக்கு சற்று தொலைவில் சின்ன சின்ன மலை போன்ற மேடுகளை தாண்டினால் அந்த இடத்தை போய் சேரலாம். அவன் இருக்கும் இடத்திலிருந்து மூன்றாவது இரயில் நிலையம். நிறைய பசுமை. அவனுக்கு பெயர் தெரியாத பல பூக்கள். முற்புதர்கள். பாறைகள். அங்கிருக்கும் இடிந்துபோன மண்டபத்தில் மிஞ்சி நிற்கும் ஒரு சுவரும் அந்த இரும்புக்கதவும் தன்னிடம் ஏதோ சரித்திரம் சொல்வதாகவே அவனுக்கு நினைப்பு. ஆள் அரவம் அற்ற அந்த இடத்தை சில மாதங்களுக்கு முன் முதல் முறை கண்டவனுக்கு ஏதோ சொர்கத்தை பார்த்த மகிழ்ச்சி. அன்று பாய்ந்து பாய்ந்து படமெடுத்தான். வழி தவறிய ஆட்டுக்குட்டி மந்தைய வந்து சேர்ந்தது போல மனசுக்குள்ள துள்ளி குதித்தான். எத்தனை முறை சென்றாலும் அவனுக்கு சற்றும் சலிக்காத இடம் அது. மனிதர்களுக்கு புரியாத அவன் உணர்வுகளை அந்த இடத்தில் உள்ள அனைத்தும் முழுதாய் புரிந்து கொள்வதாக ஒரு எண்ணம் அவனுக்கு.

சன்னலில் தலை சாய்த்து ஏதோ நினைவில் அழ்ந்து போக, மேகம் மீண்டும் சூழ்ந்ததை அவன் கவனிக்கவில்லை. இறங்க வேண்டிய இடம் வந்ததும் யாரோ தட்டி எழுப்பியது போல தெளிவானான். இருட்டி போன வானத்தை சோகத்துடன் அண்ணார்ந்து பார்த்தபடியே ரயிலிலிருந்து இறங்கினான். இவ்வளவு தூரம் வந்து திரும்புவதா? அடுத்த இயந்திர வாரத்தை நினைவில் எண்ணி, என்னவானாலும் சரியென்று அந்த இடத்தை நோக்கி நடை போட்டான். அந்த இடத்தை நெருங்கும் போதே அவனை வரவேற்பது போல காற்றில் தலை ஆட்டிகொண்டிருந்தது அவனுக்கு பெயர் தெரியாத அந்த வெள்ளை பூ. மனதில் இருந்த எல்லா உணர்வும் நீங்கி புன்னகைத்தான் சடையன். கையில் அள்ள முடியாத அந்த இடத்தை தழுவிக்கொள்ள ஆவல் வந்தது. அந்த பூவின் இதழை வருடிக்கொடுத்து தர்பாரில் மன்னன் நடை போடுவது போல, பெருமையோடு இருபுறமும் நோக்கி கொண்டே நடந்தான். ஆம் அது அவனுக்கு சொந்தமான கோட்டை என்றுதான் நினைப்பு அவனுக்கு. புது மலர்கள், உதிர்ந்த இலைகள், அரும்பாத மொட்டு, தனது முள்ளில் குத்தியே கிழிந்த இலை என்று எல்லாவற்றையும் தன் புகைப்பட பெட்டியில் பதிவு செய்தான். அவன் பதிவு செய்வது பொருட்களை அள்ள. நிகழ்வுகளை, அந்த இடம் அவனுக்குள் பொங்க செய்யும் உணர்வுகளை.

பத்து படம் எடுப்பதற்குள் பொழிய துவங்கியது வானம். தூரல் பெரும் மழையாக மாற புகைப்பட பெட்டியை பார்த்தபடியே அந்த மண்டபம் நோக்கி ஓடினான். "இன்னும் கொஞ்சம் நேரம் பொறுக்க உன்னால் முடியாதா?" என்று கேட்பவன் போல அந்த இரும்புக்கதவோரம் ஒண்டிக்கொண்டு வானத்தையே பார்த்து கொண்டிருந்தான். மழை நிற்பதாக தெரிய வில்லை. புகைப்பட பெட்டி நனையாமல் வீடு சேருவதெப்படி என்று யோசித்தான். கால்களில் ஈரம் ஏற சோகம் தலைக்கேறியது. அவன் சோகம் புரிந்தது போல மேகங்கள் உடனே கலைந்தன. எட்டிப்பார்த்தான் சூரியன். சடையன் கண்களில் புன்னகை. அடுத்த மழை வருமுன் இன்னும் பத்து படமாவது எடுத்துவிட்டு வீட்டிற்கு ஓட நினைத்தான். வரும் வாரமெல்லாம் பார்த்து ரசிக்க இந்த இருபது படம் அவனுக்கு போதும். வேகமாக ஓடினான் படமெடுக்க. இதுவரை பார்த்திராத அழகில் அந்த இடம். மழைத்துளி இல்லாத இதழோ இலையோ இல்லை. அஸ்தமிக்க காத்திருக்கும் சூரியனின் மஞ்சள் கதிர்கள் அந்த துளிகளுக்குள் புகுந்து அவன் கண்களில் சேர்ந்த போது செத்துப்போனான். அந்த அமைதியான அழகு அவனை நிலை மறக்க செய்தது. அது என்ன உணர்வென்றே தெரியவில்லை அவனுக்கு. இத்தனை அழகை அவன் எங்கேயும் பார்த்ததில்லை. இத்த உணர்வை எதுவும் அவனுக்கு தந்ததில்லை. மீண்டும் ஓடி படமெடுத்தான்.

திடீரென்று ஏதோ ஆழமான ஒன்றை உணர்ந்து நிமிர்ந்தான். தொண்டை குழி அடைத்தது. எதையோ ஆவலாக எதிர்பார்ப்பது போல அண்ணார்ந்து வானத்தை பார்த்தான். மீண்டும் தூரல். நனைந்து போக தயாரானவனாக அசையாது நின்றான் கண்களை சற்றும் மூடாமல். கண்ணில் விழுந்த துளி ஒன்று வழிந்தோடி உதடுகளை சேர அது கரித்தது.

Tanita Tikaram - I Might Be Crying

Sunday, June 29, 2008

0 comments  


What I didn't know back then
Was that I might be crying
It's such a simple sentiment
To steal the show
And what I didn't know back then
Is that I might be losing you
And still I wouldn't know

And now I suck up to the pale moonlight
Like it's gonna lead me home
And I shiver in my tired clothes
As if that could keep me warm
And now I stare across the dirty river
And I breathe this dirty air
And I'm sure upon the bridge I'll see you
'Cos I dreamt I'd kiss you there

What didn't I know back then
Is how great the sin
How time goes so slowly
When you're cheating on a friend
And what I didn't know back then
Is that I might be needing you

Yeah, I might be needing you
The need it doesn't end
And now I stare across the dirty river
And I breathe this dirty air
And I'm sure upon the bridge I'll see you
'Cos I dreamt I'd kiss you there

What I didn't know back then
Was that I might be crying
It's such a simple sentiment
To steal the show

கனவுகள்

Sunday, June 22, 2008

0 comments  

என்னடி முனியம்மா - ஒரு அபிமான கிராமிய பாடல்

Monday, June 16, 2008

0 comments  












முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் -நீ
முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.

கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்டபுள்ள
நாக்கு சிவந்தபுள்ள கண்ணம்மா - இனி
நான்தாண்டி உன் புருஷன் பொன்னம்மா

என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி
யாரு வெச்ச மைய்யி - இது நான் வெச்ச மைய்யி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.

மாடு ரெண்டும் மதுர வெள்ள மணிக ரெண்டும் தஞ்சாவூரு (2)
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா - அது
கூடுதடி சாலபாத பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

குத்தாலம் அருவியில குளிச்சாலும் அடங்காது (2)
அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா - நீ
அருகில் வந்தால் சிலு சிலுக்கும் பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

பச்சரிசி பள்ளழகி பால் போலும் சொல்லழகி
பச்சரிசி பள்ளழகி - பசும் பால் போலும் சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா - நீ
சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வெச்சி
இடுப்புல சொருகுறியே கண்ணம்மா - அது
கொசுவமல்ல என் மனசு கண்ணம்மா

(என்னடி முனியம்மா...)

ஏறிக்கற ஓரத்துல ஏத்தம் எரக்கயில (2)
இங்கிருந்து பாக்கயில கண்ணம்மா - நான்
எங்கேயோ போறேனடி பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

மழையில நனயும் போது மாந்தோப்பில் ஒதுங்கும் போது (2)
மெல்ல அணைக்கும் போது பொன்னம்மா - உன்
மேனி நடுங்கலமோ பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல லவுக்க துணி (2)
ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா - அதில்
ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா

கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்டபுள்ள
நாக்கு சிவந்தபுள்ள கண்ணம்மா - இனி
நான்தாண்டி உன் புருஷன் பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

Aerosmith - Hole In My Soul

Friday, June 13, 2008

0 comments  





I'm down a one way street
With a one night stand
With a one track mind
Out in no man's land
The punishment sometimes
Don't seem to fit the crime

Yeah there's a hole in my soul
But one thing I've learned
For every love letter written
There's another one burned
So you tell me how it's gonna be this time

Is it over?
Is it over?
'Cause I'm blowin' out the flame

Take a walk outside your mind
Tell me how it feels to be
The one who turns
The knife inside of me

Take a look and you will find
There's nothing there, girl
Yeah I swear, I'm telling you, girl yeah 'cause

(Chorus)
There's a Hole In My Soul
That's been killing me forever
It's a place where a garden never grows
There's a Hole In My Soul
Yeah, I should have known better
'Cause your love's like a thorn without a rose
Yeah, yeah

I'm as dry as a seven year drought
I got dust for tears
Yeah I'm all tapped out
Sometimes I feel broken and can't get fixed

I know there's been all kinds of shoes
Underneath your bed
Now I sleep with my boots on
But you're still in my head
And something tells me this time
I'm down to my last licks

'Cause if it's over
Then it's over
And it's driving me insane

Take a walk outside your mind
Tell me how it feels to be
The one who turns
The knife inside of me
Take a look and you will find
There's nothing there, girl, yeah, I swear
I'm telling you girl yeah 'cause

(Chorus)

Yeah, is it over?
Yeah, it's over
And I'm blowing out the flame

Take a walk outside your mind
Tell me how it feels to be
The one who turns
The knife inside of me
Take a look and you will find
There's nothing there, girl, yeah, I swear
I'm telling you girl yeah 'cause

(Chorus)

Oh, oh...

(Good night taj...good night Chelsie!)


வசந்தம்!

Wednesday, June 4, 2008

2 comments  


கொல்லும் குளிர் குறைந்து
இன்னும் ஒரு வசந்த காலம்

பருவம் வந்த பெண் போல
தினம் புதுமலர்கள் தாங்கும் மரங்கள்

இதமான சிலுசிலு காற்று
இடைவிடாமல் பறவைகள் பாட்டு

காலம் மாற கோலத்தில் எத்தனை மாற்றம்.

மனிதர்கள் வாழ்விலும் காலங்கள் உண்டா?
எண்ணிப்பார்க்கிறேன்!

வசந்தமே காணாமல் வறுமையில் துவண்டு
வீழ்ந்த தளிர்கள் எத்தனை?

வாழ்வெல்லாம் போராடி
சாகும் நேரத்திலும் சுகம் காணாத உயிர்கள் எத்தனை?

விதையாய் விழுந்திருக்கலாம்!
வீண் மனிதராய் பிறந்துவிட்டோம்!!

வைரமுத்து கவிதை - தோழிமார் கதை

Sunday, June 1, 2008

If God is dead - Osho explains :)

Friday, April 11, 2008

2 comments  

குமரிக் கண்டம் (லெமுரியா)

Monday, April 7, 2008

0 comments  

இங்குதான் புதைந்ததோ என் தமிழ் வரலாறு?!!!!!!!!!!



மேலும் தகவலுக்கு:

http://www.thamizham.net/web150406/lemuria.htm [Requires Internet Explorer]

http://www.thule.org/lemuria.html
http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)
http://www.sacred-texts.com/atl/tll/index.htm

I wish...

Friday, April 4, 2008

0 comments  

I wish I knew how it would feel to be free
I wish I could break all the chains holding me
I wish I could say all the things that I should say
Say 'em loud say 'em clear
For the whole wide world to hear

I wish I could share
All the love that's in my heart
Remove all the bars that keep us apart
And I wish you could know how it is to be me
Then you'd see and agree that every man should be free

I wish I could be like a bird in the sky
How sweet it would be if I found I could fly
Well I'd soar to the sun and look down at the sea
And I'd sing cos I know how it feels to be free

I wish I knew how it would feel to be free
I wish I could break all the chains holding me
And I wish I could say all the things that I wanna say
Say 'em loud say 'em clear
For the whole wide world to hear
Say 'em loud say 'em clear
For the whole wide world to hear
Say 'em loud say 'em clear
For the whole wide world to hear

One love one blood
One life you've got to do what you should
One life with each other
Sisters, brothers

One love but we're not the same
We got to carry each other Carry each other
One One One One One...

I knew how it would feel to be free
I knew how it would feel to be free

ம.செ வின் ஒரு அற்புதமான ஓவியம்

Saturday, March 29, 2008

0 comments  

ம.செ வின் ஒரு அற்புதமான் ஓவியம் (குங்குமம் இதழில் கண்டது)

அம்மா

Monday, March 24, 2008

0 comments  

Shot this yesterday at Central Park, NY.

நேற்று கனவில்.

Sunday, March 16, 2008

2 comments  

தென்றல் செய்த குறும்பு

Saturday, March 15, 2008

0 comments  







பாரதிதாசன் கவிதை இது.
புரட்சி பொறி பறக்கும் ஒரு கவிஞன் ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளையும் இத்தனை அழகாக எழுதியதில் அசந்து போனேன்!

...........................................................................................

இழுத்திழுத்து மூடு கின்றேன்
எடுத்தெடுத்துப் போடு கின்றாய்
பழிக்க என்றன் மேலாடையை தென்றலே - உன்னைப்
பார்த்து விட்டேன் இந்தச் சேதி ஒன்றிலே!

சிலிர்க்கச் சிலிர்க்க வீசு கின்றாய்
செந்தாழை மணம் பூசு கின்றாய்
குலுக்கி நடக்கும் போதிலே என் பாவாடை - தனைக்
குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்தாய் தென்றலே!

வந்து வந்து கன்னம் தொட்டாய்
வள்ளைக் காதில் முத்த மிட்டாய்
செந்தாமரை முகத்தினை ஏன் நாடினாய் - ஏன்
சீவியதோர் குருங்கழலால் மூடினாய்!

மேலுக்குமேல் குளிரைச் செய்தாய்
மிகமிகமிக் களியைச் செய்தாய்
உள்ளுக்குள்ளே கையை வைத்தாய் தென்றலே
உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் - என் தென்றலே!

...........................................................................................

Passing clouds....

Saturday, March 8, 2008

0 comments  

It's been raining intermittently since yesterday evening...
Today, the day was all dark...the sky became a little clear in the evening.

Shot this from the balcony with the built-in webcam on my laptop.
It was a divine sight...felt bliss!



Added a Native American flute music...
The video is fast farwarded to the duration of the music, coz the clouds moved v e r r r r y y y y y slow :) what rush do they have anyway? :)

Before Sunrise

0 comments  

I watched Before sunrise yesterday night, one more time...

When I first watched this movie I felt like reading a wonderful poem in a language that I knew and had no one to speak with in an alien world.

I like this movie a lot because its not about love, but something higher...


A poem from the movie...
Sure is wonderful, but as the hero says isn't it just plugging in words? :)

Daydream delusion
Limousine eyelash
"oh baby, with your pretty face
drop a tear in my wine glass"
Look at those big eyes
See what you mean to me
Sweet cakes and milkshakes
I'm a delusional angel
I'm a fantasy parade
I want you to know what I think
Don't you want to guess anymore
You have no idea where I came from
We have no idea where we going
Lodge in life, like branches in the river
Flowing downstream caught up in the current
" I carry you, You'll carry me"
That's how it could be..
Don't you know me..
Don't you know me by now?

au revoir!

சார் ஒரு சந்தேகம்...

Sunday, February 24, 2008

0 comments  



















From: http://www.keetru.com/jokes/jokes/31.php
--------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

மாணவன்: சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்: என்ன சந்தேகம்?

மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?
--------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவையையும் தாண்டி யோசிக்க வேண்டிய விஷயம் இது!!!

கவிஞன் யானோர் காலக் கணிதம்

Wednesday, February 20, 2008

6 comments  

கல்லூரியில் படித்து, வியந்து ரசித்த ஒரு கண்ணதாசன் கவிதை.








கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!
செல்வர்தன் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவிவா ளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!


வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்

கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!


- கவிஞர் கண்ணதாசன்

சாலை விளக்கு

Friday, February 8, 2008

3 comments  

வெள்ளிக்கிழமை அந்தி நேரம்.
அலுவல் முடித்து அமைதியான சாலையில்.

ஆயிரம் நினைவுகளை அசைபோட்டு
காலாற நடந்து வந்தேன்.

அங்கிருந்த பூங்கா ஒன்றில் காதலிலே தமை மறந்து
கண்மூடி திலைத்திருந்தனர் காதலர் இருவர்.

ஏதோ ஒன்று நினைவை தொட
என் உதடுகளில் சிறு புன்னகை.

காட்டில் வாழ்ந்த மனிதன் போல
கண்ட இடத்தில் காதலிக்கும் மக்கள்.

தவறொன்றும் இல்லை!
இது இவர்கள் கலாச்சாரம்!

சற்று தூரம் நடந்து வந்து சாலை கடக்க நின்றிருந்தேன்.
எனக்கெதிரே அந்தப்பக்கம் பெண்ணொருத்தி வந்து நின்றாள்.

அந்தியில் மலர்ந்த பூ போல அத்தனை பொலிவு அவள் முகத்தில்.
ஆடை என்ன, அணிகள் என்ன, அம்பு தொடுக்கும் விழிகள் என்ன!

நரேந்திரனே வியந்த பெண்கள்!
நான் வியந்ததில் வியப்பென்ன?

காத்திருந்த விளக்கெரிய சாலை கடக்க முற்பட்டேன்.
கன்னி மட்டும் நகரவில்லை, கண்கள் அவையும் திரும்பவில்லை!

புன்னகை செய்தாள் பூங்கொடியாள்! - அமெரிக்கர் வழக்கம் என்பதினால்
பதிலுக்கு நானும் புன்னகைத்தேன்!

கண்கள் பிரியும் முன்னே, புன்னகை சற்றும் குறையாமல்
செவ்விதழ்கள் விரித்து கேட்டாள் "ஹே! டூ யு வான ஹேங் அவுட்?!"

நண்பன் சொன்ன வேசியினை
இன்றே கண்டேன் முதல் முறையாய்!!

இடைவெளி

Thursday, January 24, 2008

0 comments  

இப்ப தங்கி இருக்குற வீடு ஸ்டேஷன்லேருந்து ரொம்ப தூரம். அதனால தெனமும் வேலைக்கு போறப்ப வீட்டுக்கு போன் பண்ணி பேசிக்கிட்டே போவேன். அப்படி சமீபத்துல அம்மாகிட்ட பேசுனப்ப என் தம்பி இத சொன்னதா சொன்னாங்க. "அம்மா, சின்னவயசுல நானும் மகேசண்ணாவும் ஒன்னாத்தான் சுத்துவோம்ல? எங்க போனாலும் ரெண்டுபேரும் ஒன்னாத்தான் போவோம். ஒரு நாளு நான் அழுதுகிட்டு இருந்தேன். அப்ப அண்ண என்கிட்ட ஏன்டா அழுவுரன்னு கேட்டுச்சு. நான் முனியோட காத்தாடிய கல்லாங்கோல் போட்டு புடிச்சேன் அதனால என்ன அடிசிட்டான்னு சொன்னேன். ஒடனே அண்ண அவன்கூட மல்லுகட்டி சண்ட போட்டுச்சு...." இப்படி இன்னும் ரெண்டு மூணு விஷயம் சொன்னாங்க.


ஸ்டேஷன்வரைக்கும் பேசிக்கிட்டே போனேன். வண்டி வந்ததும் அம்மாகிட்ட BYE சொல்லிட்டு ஏறினேன். வழக்கம்போல வெள்ளக்காரங்க அளவுக்கு இந்தியர் கூட்டமு இருந்துச்சு. தம்பி சொன்னத நெனச்சி பாத்தேன். முனிகூட நான் சண்ட போட்டேனா? சாதாரணமா நான் எந்த விஷயத்தையும் மறக்க மாட்டேன். அதுவும் சின்ன வயசுல நடந்தது எல்லாமே ஞாபகம் இருக்கு. இது மட்டும் நினைவுக்கு வரல.

முனி சேரியில இருந்த பையன். சேரி பேரு கூட....ம்ம்ம்..அங்........காக்காபள்ளம். கருப்பா இருப்பான். அவதாரம் படத்துல வர்ற Naser மாதிரி முடி வெச்சிருப்பான். காத்தாடி விடறதுல கில்லாடி. அவன்கூட தம்பிக்காக சண்டபோட்டேன்னு நெனக்குக் போது ஒரு சந்தோஷம் வந்துது.

அஞ்சு இல்ல ஆறாவது படிச்சிட்டு இருந்திருப்பேன். அப்பல்லாம் ரெண்டு பேரு வாழ்கையும் ஒன்னுதான். போடுற துணி கூட ஒரே மாதிரிதான் வாங்குவாங்க. ஒருத்தருக்கு தெரியாம இன்னொருத்தருக்கு பெரிய சந்தோஷமோ கவலையோ இருந்தது இல்ல. இப்ப, ஒலகத்துல அவன் ஒரு மூல நான் ஒரு மூல. வாரத்துக்கு ஒருதடவ இன்டர்நெட்ல அவன் மொகத்த பாக்குறதே அதிகம். வருஷம் ஓட ஓட வாழ்க எவ்வளோ மாறுது. என்னவிட பெரிய ஆளா ஆயிட்டான். அவனா எவளோ பிரச்சனைகள சமாளிக்கிறான். எனக்கு எதுவுமே தெரியாது. மனசு கனத்தது.

நான் எறங்க வேண்டிய ஸ்டேஷன் பேர announce பன்னாங்க. அப்பதான் இந்த ஒலகதுக்கே வந்தேன். அமெரிக்கர் வழக்கப்படி பொம்பளைங்களுக்கு வழிவிட்டு அப்புறமா எறங்குனேன். ஸ்டேஷனுக்கு வெளிய வந்து மணியபாத்தேன். 9:15 ஆச்சு. நேத்து பாதியில விட்ட வேலஒன்னு ஞாபகத்துக்கு வந்துது. ஆபிஸ நோக்கி வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.....