என்னடி முனியம்மா - ஒரு அபிமான கிராமிய பாடல்

Monday, June 16, 2008

 












முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் -நீ
முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.

கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்டபுள்ள
நாக்கு சிவந்தபுள்ள கண்ணம்மா - இனி
நான்தாண்டி உன் புருஷன் பொன்னம்மா

என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி
யாரு வெச்ச மைய்யி - இது நான் வெச்ச மைய்யி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.

மாடு ரெண்டும் மதுர வெள்ள மணிக ரெண்டும் தஞ்சாவூரு (2)
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா - அது
கூடுதடி சாலபாத பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

குத்தாலம் அருவியில குளிச்சாலும் அடங்காது (2)
அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா - நீ
அருகில் வந்தால் சிலு சிலுக்கும் பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

பச்சரிசி பள்ளழகி பால் போலும் சொல்லழகி
பச்சரிசி பள்ளழகி - பசும் பால் போலும் சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா - நீ
சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வெச்சி
இடுப்புல சொருகுறியே கண்ணம்மா - அது
கொசுவமல்ல என் மனசு கண்ணம்மா

(என்னடி முனியம்மா...)

ஏறிக்கற ஓரத்துல ஏத்தம் எரக்கயில (2)
இங்கிருந்து பாக்கயில கண்ணம்மா - நான்
எங்கேயோ போறேனடி பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

மழையில நனயும் போது மாந்தோப்பில் ஒதுங்கும் போது (2)
மெல்ல அணைக்கும் போது பொன்னம்மா - உன்
மேனி நடுங்கலமோ பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல லவுக்க துணி (2)
ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா - அதில்
ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா

கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்டபுள்ள
நாக்கு சிவந்தபுள்ள கண்ணம்மா - இனி
நான்தாண்டி உன் புருஷன் பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

0 comments: