உலகினை தூர் வாரவேண்டுமே!!

Wednesday, July 16, 2008

 


கற்றது தமிழ் திரைப்படத்தில் உள்ள இந்த பாடல் எவ்வளவு பிரபலமென்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறி! மெட்டுக்கு ஏற்றாற்போல் வார்த்தைகளை திணிக்காமல் சொல்லவந்ததை அழகாகவும் ஆழமாகவும் சொல்லும் வரிகள். நா.முத்துகுமாரின் படைப்பு இது. சுரணை உள்ள தமிழனுக்கு நரம்பு புடைக்கும்!!!!











வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி
வலிக்க வலிக்க தொட்டுப்பார்த்தேன்
குறுக்கு வெட்டு தோற்றத்தில்
வலியை கொஞ்சம் வெட்டிப்பார்த்தேன் (2)

இது வேறு உலகம் ஓஹோ!
இது பத்தாம் கிரகம் ஓஹோ!
இறைவா இங்கே
நீயும் வந்தால் மிருகம்!

இது வேறு உலகம் ஓஹோ!
இது பத்தாம் கிரகம் ஓஹோ!
இறைவா இங்கே
வந்தால் நீயும் மிருகம்!

கற்றதால் பெற்றதோ பெரும் வாழல்லவா?
குத்துதே கொத்துதே பல பாம்பல்லவா?
எங்கு போயினும் பேய்களே!
எலும்பு தின்றிடும் நாய்களே!
எட்டு திக்கிலும் பொய்களே
இங்கு அலைகின்றதே

கேட்டதால் பெற்றதோ பெரும் வலியல்லவா?
கொன்றதால் கண்டதோ புது வழியல்லவா?
எங்கு நோக்கிலும் அம்மணம்
ஏற்று கொள்ளுமா என்மனம்
ஆடி தீர்குதே சன்னதம்
ரத்தம் கொதிக்கின்றதே!

உலகினை தூர் வாரவேண்டுமே!
உண்மை மட்டும் வாழவேண்டுமே!
கனவுகள் கை கூட வேண்டுமே!
கொள்ளும் கோபம் கூட வேண்டுமே!
எனக்கென புது பூமி வேண்டுமே!
தமிழ் தான் அங்கே வேண்டுமே!
தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே!
எச்சில் இதயம் மாரவேண்டுமே!

அடடா இது நடக்குமா?
என் பூமி எனக்கு கிடைக்குமா? ஓ!
அது வரை நெஞ்சம் பொறுக்குமா?
என் தொன்மத்தமிழினம் பிழைக்குமா? ஓ?

அகம் புறம் என இரண்டு பிரிவிலே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்
அடுத்தவர் தமை சீண்டி பார்க்கையில்
எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குணம்!

0 comments: